" alt="" aria-hidden="true" />
தேனி மாவட்ட பகுதிகளில் பரவலான மழை மக்கள் மகிழ்ச்சி:
தேனி மாவட்டம் பகுதியை சுற்றியுள்ள ஊர்களில் குறிப்பாக பெரியகுளம், தேவதானப்பட்டி, முருகமலை, கும்பகரை, சோத்துப்பாறை, இலட்சுமிபுரம், தேனி, வடுகபட்டி, ஜெயமங்கலம், போன்ற பகுதிகளில் மாலை 6:30 மணிக்கு மேல் திடீரென மழை பெய்ய தொடங்கியது.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழை வெயிலின் தாக்கத்தை தீர்த்தது.
இதமான காற்று வீசத்தொடங்கியது இதனால் மக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்..
மேலும் சிறு பெரு விவசாயிகள் சந்தோஷத்தில் உள்ளனர்.
இப்பகுதியில் மாமரங்கள் விளைச்சல் பகுதிகளான அனைத்து விவசாயிகளும் இந்த மழையினால் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர் .